Tuesday, January 24, 2012

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை தொடக்கவிழா.

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை தொடக்கவிழா மற்றும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம்


வணக்கம் உறவுகளே,

வரலாற்றை படி, வரலாற்றைப்படை, வரலாறாக வாழ்  என்ற முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை தொடக்கவிழா மற்றும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி அன்று சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் தெருவில் நடைபெற இருக்கிறது. மாணவர்களை நோக்கி திரும்பாத அரசியல் வெல்லாது என்றுணர்ந்து இனத்தை காக்க இனமானம் மீட்க மாணவர்களோடு கைகோர்த்து மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவை சுமந்து அவர்கள் கனவை நோக்கி பயணிக்க நாம் தமிழர் கட்சி அழைக்கிறது.   
திரள்வோம் திரள்வோம்! பகைமிரளத்திரள்வோம்!! பைந்தமிழ் இனத்தீரே!!!



-- நாம் தமிழர் கட்சி