Monday, January 23, 2012

என் இனிய பாரதிராசாவே ஒரு தமிழ் இளைஞனின் இன உணர்வு.

வழக்கமான உங்க ஸ்டைல் கும்பிடுடோடு ஆரம்பிக்கிறேன். உங்களின் முதல் மரியாதை புரிந்தது. இப்ப திடீரென்று காங்கிரசிடம் வாங்கிய ‘முதல்’ மரியாதையும் புரிந்தது.

வரலாற்றின் போக்கில் எத்தனையோ துரோகங்களையும், இழிவுகளையும் தமிழ்ச்சமூகம் சந்தித்து விட்டது. இது உங்கள் முறை. அன்னை சோனியாவின் அருந்தவப்புதல்வராக மாறி விட்ட உங்களுக்கு இனி தமிழ், தமிழ்ச்சமூகம் என்ற சொற்கள் கடும் எரிச்சலைத் தரலாம். பதினாறு வயதினிலே கோபாலகிருட்டிணனுக்கு காங்கிரசு வேட்டி கட்டி விட்டது போல ஆகி விட்டது உங்கள் நிலைமை. பரவாயில்லை. நின்ற மேடையில் தின்ற அளவிற்கு விசுவாசம் காட்டி விட்டீர்கள்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் பாராளுமன்றத்தேர்தலின் போது இனத்தினை அழித்த காங்கிரசை ‘வக்காளி..ஒரு பய செயிக்கக்கூடாதுடா’ என்று நீங்கள் முண்டாவை இறுக்கி அண்டாவோடு தமிழக வீதிகளில் உங்கள் இயக்குனர்களோடு வலம் வந்தீர்கள். ’ஐ வாண்ட் கம்பிளீட் காங்கிரஸ் டிஃபிவீட்’ என்று கரகரத்த குரலில் உங்களை சந்தித்தஇளைஞர்களிடம் பட்லர் இங்கீலீசில் பட்டராய் உருகிய போது கேட்டவர்களின் நானும் ஒருவன்..

விடுங்க. அந்த கருமத்தை. அது போன வருசம் என வடிவேலு கணக்காய் வாய்தா வாங்கிக்கலாம். ஈழத்துல இனம் அழிஞ்சி பிணமா கிடக்கும் வேளையில தமிழன் ரணமா திரியுற மாதிரி ஒரு காரியம் செஞ்சுங்களே….ம்ம்..செம்மொழி மாநாட்டுக்கு போய் கருணாநிதிக்கு காவடி எடுத்து ஆடினது.. அதைக் கூட காலக்கொடுமை என கணக்கு காட்டிடலாம். ஆனா..இன்னிக்கு பாரத விலாஸ் சிவாஜி கணக்கா நெஞ்சு வலிக்க நானும் தீவிர (?) காங்கிரசுக்காரந்தான் –னு ஒரு கானா பாடியிருக்கீங்களே…அந்த கருமத்தை தான் எந்த காசியில போயி கழுவுறது என கலங்கி உட்கார்ந்திருக்கேன்.

எம் இனத்தை அழித்த காங்கிரசை எதிர்த்து களம் கண்ட பாரதிராசா இப்போ நேரு மாமா ரோசாவா ஆனது என்னவோ சரிதான். அதுக்காக பழச மறந்தா எப்புடி…? . எம் தேசியத் தலைவர் நேசித்த இயக்குனர் இமயம் இப்ப ’ சத்தியமூர்த்தி பவன் – க்கு அருகில் உள்ள ஆரிய பவன் கணக்கா காலாவதியா ஆயிடிச்சே என்ற கவலைதான் எமக்கு.

சென்ற ஆட்சியில உங்களின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதுக்கு பின்னாடி நீங்க கொட்டாவி உடறதுக்கு மட்டும் தான் வாய திறப்பீங்கன்னு சொன்னாங்க. ஆனா இப்ப சமீப காலமா நீங்ல வாய திறந்தாலே கெட்ட ஆவி மட்டுமல்ல, சுடுகாட்டு ஆவியில்ல முழிச்சிக்கிட்டு வருது. உங்கள வைச்சி பல பேரு அரசியல்வாதியா ஆயிட்டாங்கன்னு சில வாரங்களுக்கு முன்னால் மூக்கை சிந்திருந்திங்க. ஆனா..இப்ப தானே தெரியுது..கதர் சட்டை மாட்டதான் இந்த கதறல்ன்னு..

சொக்கத்தங்கம் சோனியா படம் போட்ட அழைப்பிதழ்-ல உங்க பேரு இருந்ததே பெருமைன்னு உருகி இருக்கீங்களே..அப்ப ஈழம் கருகி கிடந்த வாடை உங்க நாசித்துவாரங்களை தொடலீயா..?

நீங்க உங்க படத்து நாயக,நாயகிகளுக்கு அருமையா நடிச்சி காட்டுவீங்கன்னு சொன்னாங்க. அதெல்லாம் சும்மாங்க. எங்ககிட்ட இதுவரைக்கும் நடிச்சிகிட்டு இருந்ததுதான் டாப்பு.

முதல் மரியாதை,கடலோர கவிதைகள், காதல் ஒவியம், -ன்னு காலம் கடந்து பல காவியங்களை திரையில வரைஞ்ச உங்க கைகள் இனி கைச்சின்னம் வரையற போறதுதான் தூளு..

நீங்க தேனீ மாவட்டத்து ஆளு..உம்மன் சாண்டி கட்சியின் உறவுக்காரர் ஆனதுதான் உதைக்குது.

காவிரி தண்ணிக்காக நெய்வேலி கரண்ட கட் பண்ண ஊர்வலம் போனது, இராமேஸ்வரத்துல ஈழத்துக்காக யாத்திரை போனதெல்லாம் சோனியா பாசத்துக்காக,மூப்பனாரின் மூச்சுக்காற்றுக்காக நீங்க மறந்திடலாம். ஆனா நம்பி நின்ன நாங்க எங்கே நாண்டுகிட்டு சாவுறது.?

காதல் கூட கடவுள் மாதிரிதான். கால தேச தூரங்களை கடந்தது அது . என படம் முடிஞ்ச பிறகு கடம் வாசிச்சிங்களே ..இப்ப காங்கிரசு கூட கடவுள் மாதிரிதான் ..ஈழ அழிவு,இனத்துரோகங்களை கடந்தது அது –ன்னு கட்டுரை வாசிப்பீங்களா..?

விடுங்க பயபுள்ளைக எப்பவும் இப்படித்தான். ஏமாந்து போறதே இவனுக பிழைப்பா போயிடிச்சி –ன்னு நீங்க மெலிசா சிரிக்கிறது எங்களுக்கு புரியுது. ஆனா..உங்களையும் ஒரு மனுசனா மதிச்சி ஆடு நனைஞ்சாலே இப்பல்லாம் குடை பிடிக்கும் அய்யா ஞானதேசிகன் ’பாரதிராசா போன்ற ஆட்கள் காங்கிரசுக்கு வரணும்’- சொல்லியிருக்கிறாரே..இத நினைச்சு நாங்க எதுனால சிரிக்கிறதுன்னு எங்களுக்கு தெரியல.

விடுங்க.. எம் இனத்தை..எம் மொழியை பற்றிய கருமம்- காங்கிரசையும் பற்றட்டும்.

இனி உலக தமிழர்களை பற்றி கதைப்பதற்கு இவருக்கு உரிமை இல்லை...
காங்கிரஸ் கட்சியே இல்லாது செத்து போ...

தமிழர்களை கொன்ற சனியே தமிழர்களின் இன் நன்னாளில் சாபமிடுகின்றோம் எம் மக்கள் பட்ட துன்பங்களுக்கு பதிலாக இவ்வுலகில் யாருக்கும் வந்திராத எல்லா நோய்களும் உனக்கு வந்து இவ்வுலகு சந்தோசத்தில் குதூகலிக்க நீ மட்டும் அழுது குழறி இவ் உலகை விட்டு போவாய் உன் பிணத்தை உன்னுடைய பிள்ளைகள் உன் நாட்டு மக்கள் கூட கிட்ட போய் பார்க்க முடியாதவாறு மணம் வீசும் இது என் தமிழ் தாய் மீது சத்தியம்.