Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...

தமிழீழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்த சிங்கள இனவெறியன் ராஜபக்சவிற்கு எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காத தமிழக மக்களே...

செந்தமிழன் சீமான் மூன்று வருடங்களிற்கு முன் இந்து மதத்தை பற்றி பேசியதை ஏன் இப்போது விமர்சிக்கிறிர்கள்...

தமிழனின் உயிரை விட உங்களிற்கு இந்த சாதி,மதமா பெரிதாக தெரிகின்றதா.



இன்று தமிழக மீனவர்கள், தமிழக விவாசாயிகள், கூடங்குளம் மக்கள் என ஒவ்வொருவராக செத்து மடிந்து வருகிறார்கள் அவர்களிற்கு ஆதரவாக எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காத தமிழக மக்களே...

நீங்கள் சாதி, மதம் இந்த இரு விடயங்களிற்குள்ளும் உங்கள் மூட நம்பிக்கையை எப்படி புதைத்து வைத்துள்ளிர்கள் என்பதை தெட்ட தெளிவாக தெரிகின்றது.

தேவயானி என்ற இந்திய பெண் அமெரிக்கா அரசால் கைது செய்யப்பட்ட போது இந்திய மக்களும் இந்திய ஊடகங்களும் எப்படி பொங்கி எழுந்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். கேரளா மீனவனை சுட்ட கொன்ற இந்தாலிய கடற்ப்படைக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேரளா மக்களும், கேரளா அரசும், கேரளா ஊடகமும் எப்படி உணர்வுடன் போராடுகிறார்கள் என்பதும் தெரியும்.

இவ்வளவும் தெரிந்த உங்களுக்கு ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களும், தமிழக மீனவனும் செத்து மடியும் போது உங்கள் கண்டனங்களும் உங்கள் போராட்டங்களும் எங்கே...

இதை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...

எம் மக்கள் உரிமைகளை மீட்க போராடும் தலைவர்கள் மீது நீங்கள் பூசும் சேறு உங்கள் அடி முட்டாள் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

நீங்கள் மூழ்கியிருப்பது போதை மருந்துகளை விட மிக கொடிய விசமான மூட நம்பிக்கையில்  என்பது உறுதி.

இன்றும் அவுஸ்ரேலியா, அமெரிக்கா என பல நாடுகளில் பெண்களின் உள்ளாடைகளில் இந்து சமய கடவுள்களின் புகைப்படங்களை பொறித்தே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாடுகளிற்கு ஏன் உங்கள் கண்டனங்களை தெரிவிக்கவில்லை. 

தமிழினம் சாகும் போது வாய் மூடி மௌனமாக இருந்த நீங்கள் சாதி, மதங்களை பற்றி தவறாக பேசியதை கண்டித்து எப்போது எழுந்துள்ளிர்களோ அப்போதே உங்கள் முட்டாள் தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் வேற்று மாநிலத்தவன் பார்த்து சிரித்து கொண்டிருக்கின்றான்.

இன்றைய சூழ்நிலையில் சாதி,மதம் என்பது தமிழர்களுக்கு அவமானம்...

ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்ற போதும், தமிழக மீனவன் தினம்,தினம் சாகும் போதும் வாய் மூடி மௌனமாக இருந்த தமிழக அரசியல்வாதிகளை விட...

செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை. இன்றைய தமிழ் தலை முறை பிள்ளைகளின் அரசியல் வழிகாட்டியாக தென்படுகிறார் சீமான்.

என்னைப்பற்றி...

நான் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தவன் தான். எங்களுக்கு சொந்தமான ஒரு முருகன் கோவிலும் இருக்கின்றது எங்கள் முருகன் கோவிலுக்கு எனது அம்மப்பா பூசை செய்வார். சின்ன வயதில் நான் அவருடன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செல்வதுண்டு.

ஆனால் நான் மதவெறியன் அல்ல. அதே நேரம் இந்து மதத்தின் மேல் உள்ள மூட நம்பிக்கையையும் நம்புறவன் அல்ல.

காலத்தின் தேவை கருதி எனக்கு சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம் தமிழ் ஒன்றே போதும் என்று வாழ்ந்து தமிழுக்காக போராடி கொண்டு வருகின்றேன்.

மதத்தை நம்புங்கள். மதத்தின் மேல் உள்ள மூட நம்பிக்கையை நம்பாதீர்கள்.

இந்த பதிவு எல்லோருக்கும் அல்ல இந்து மத வெறியர்கள் உட்பட இந்து மதத்தின் மேல் மூட நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு...

தமிழீழ மாணவன்.
www.eelavenkai.blogspot.com



பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Ad Code

Responsive Advertisement